மொரட்டுவவில் தடுப்பூசி போடும் போது மருத்துவ அதிகாரிகளை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்குவதற்கான கோரிக்கையை மொரட்டுவ மேலதிக நீதிவான் உதல சுவண்டுருகொட இன்று நிராகரித்தார்.
பிணை வழங்குவதற்கு போதுமான உண்மைகளை அவர் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி சந்தேக நபரை இந்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.




