நடிகர் துல்கர் சல்மான் போலி கணக்குகள் குறித்து ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
தற்போது திரைத்துறை பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்குகள் துவங்குவது அதிகரித்து வருகிறது. மேலும் அந்த போலிக் கணக்குகளைப் பயன்படுத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவதால் அந்த பிரபலங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் உடனடியாக போலிக் கணக்குகள் குறித்து எச்சரித்துவிடுகின்றனர்.
தற்போது நடிகர் துல்கர் சல்மான் தன் பெயரில் துவங்கப்பட்டுள்ள போலிக் கணக்குகள் குறித்து ரசிகர்களை எச்சரித்துள்ளார். “இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவுசெய்து என் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகள் உருவாக்கி ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம். அது நன்றாக இல்லை.”
துல்கர் தற்போது ‘சல்யூட்’ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.




