ஜேர்மனியில் யூத அழிப்பு நடந்த இடத்தில் யாழ் நூலக எரிப்பை நினைவுகூர்ந்த தமிழர்கள்!

Date:

யாழ் நூலக எரிப்பில் 40ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஜேர்மனியில் நடந்தது.

யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் குவித்து அழித்த இடத்தில் (Bebelplatz, Berlin ) யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டை நினைவேந்தும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பினரால் இவ் நிகழ்வில் வைக்கப்பட்ட கண்காட்சியை பல வேற்றின மக்கள் பார்வையிட்டனர்.அத்தோடு அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/ நடைபெறும் இனவழிப்பை கண்டித்து தமது கருத்துக்களை பதிவுசெய்ததோடு தமிழ் இளையோர் அமைப்பினரால் மேலதிகமான விளக்கத்தையும் துண்டுப்பிரசுரத்தையும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் திடீர் என காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து, புலிக்கொடியை அகற்றும் மாறு வேண்டிக்கொண்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ் உணர்வாளர்கள், காவல்துறைக்கு  கொடி சார்ந்து விளக்கம் அளித்தனர்.

இவ்விடயம் யேர்மன் நாட்டின் பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு, இறுதியில் காவல்துறை தமிழ் உணர்வாளர்களிடம் தமது கொடியை தொடர்ந்தும் நிகழ்வில் வைத்திருக்கலாம்,அதற்கு எவ்வித தடையும் இல்லை, தம்மால் சரியான புரிதல் இல்லாது நடைபெற்ற இடையூறுக்கு தமது கவலையை தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்