சீன மீன்களுக்கு அமெரிக்க அரசு தடை!

Date:

சீனாவை சேர்ந்த நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

சீனாவை சேர்ந்த நிறுவனத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ஊழியர்கள் அடிமை போல நடத்தப்பட்டு சிலர் இறந்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தலியன் ஓசன் ஃபிஷிங் நிறுவனத்தின் ஊழியர்கள் கொத்தடிமை போல வலுக்கட்டாயமாக வேலை செய்ய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட கப்பல்களுடன் தொடர்புடைய எல்லா இறக்குமதிக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த கப்பல்களில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் உடனடியாக நிறுத்திவைக்கப்படும் என அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

தலியனில் இருந்து அமெரிக்காவுக்கு பெரும்பாலும் டூனா மீன் இறக்குமதி செய்யப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் தலியனில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியான டூனா மீன்களின் மதுப்பு மட்டும் 20 மில்லியன் டாலர்.

தலியன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தலியன் ஓசன் ஃபிஷிங் நிறுவனம் வலுக்கட்டாயமாக ஊழியர்களை அடிமை போல வைத்து வேலை வாங்குவதாகவும், மோசமான பணிச் சூழலால் சில இந்தோனேசிய மீனவர்கள் கடந்த ஆண்டு இறந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் 30க்கும் மேலான கப்பல்களுடன் தொடர்புடைய கடல் உணவு இறக்குமதிக்கு அமெரிக்க அரசு முழு தடை விதித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்