சீன மீன்களுக்கு அமெரிக்க அரசு தடை!

Date:

சீனாவை சேர்ந்த நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

சீனாவை சேர்ந்த நிறுவனத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ஊழியர்கள் அடிமை போல நடத்தப்பட்டு சிலர் இறந்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தலியன் ஓசன் ஃபிஷிங் நிறுவனத்தின் ஊழியர்கள் கொத்தடிமை போல வலுக்கட்டாயமாக வேலை செய்ய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட கப்பல்களுடன் தொடர்புடைய எல்லா இறக்குமதிக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த கப்பல்களில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் உடனடியாக நிறுத்திவைக்கப்படும் என அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

தலியனில் இருந்து அமெரிக்காவுக்கு பெரும்பாலும் டூனா மீன் இறக்குமதி செய்யப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் தலியனில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியான டூனா மீன்களின் மதுப்பு மட்டும் 20 மில்லியன் டாலர்.

தலியன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தலியன் ஓசன் ஃபிஷிங் நிறுவனம் வலுக்கட்டாயமாக ஊழியர்களை அடிமை போல வைத்து வேலை வாங்குவதாகவும், மோசமான பணிச் சூழலால் சில இந்தோனேசிய மீனவர்கள் கடந்த ஆண்டு இறந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் 30க்கும் மேலான கப்பல்களுடன் தொடர்புடைய கடல் உணவு இறக்குமதிக்கு அமெரிக்க அரசு முழு தடை விதித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்