திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனை இயந்திரமொன்றை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மரணங்களும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. எனினும், கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் பரிசோதனை இயந்திரம் திருகோணமலை வைத்தியசாலையில் இல்லை.
இதனால் பிசிஆர் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு மட்டக்களப்பு மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி வைப்பதனால் காலதாமதமாகி வருகிறது.
இது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தாார்.
இதையடுத்து, பிசிஆர் பரிசோதனை உபகரணத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாக பிரதமர் தம்மிடம் வாக்குறுதி அளித்தாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.



