உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 400 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தனது உறவினர்களுடன் உரையாடியுள்ளார்.
வெலிக்கடை சிறையில் வைக்கப்பட்டுள்ள அவர், வீடியோ தொழில்நுட்பம் ஊடாக தனது உறவினர்களுடன் நேற்று (27)உரையாடியுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாங் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.




