யாழில் 24 நாள், 6 மாத கைக்குழந்தைகளிற்கும் தொற்று!

Date:

யாழ் மாவட்டத்தில் நேற்று 24 நாள், 6 மாத கைக்குழந்தைகளிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் ஒரு தொகுதியினரின் முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. இதில் யாழ் மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்று உறுதியானது.

இதில், 24 நாளான குழந்தையொன்றும், 6 மாதமான குழந்தையொன்றும் உள்ளடங்குகின்றன.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த, பிறந்து 24 நாளான குழந்தைக்கு தொற்று உறுதியானது. குழந்தையின் தாயாரும் ஏற்கனவே தொற்றிற்குள்ளாகியிருந்தார். குழந்தைக்கு 3 நாட்களாக காய்ச்சல் இருந்தமையினால், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது.

குழந்தை தெல்லிப்பழை ஆதார வைததியசாலையில் சிகிசிசை பெற்று வருகிறது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 மாத குழந்தையும் நேற்று தொற்றுக்குள்ளானது. குழந்தையின் தாயாரான தனியார் காப்புறுதி நிறுவன உத்தியோகத்தர் ஏற்கனவே தொற்றிற்குள்ளாகியிருந்தார்.

குழந்தைக்கு நேற்று தொற்றுதியானது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. எனினும், குழந்தையின் தந்தைக்கு தொற்று ஏற்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்