சீனா நன்கொடையாக வழங்கிய 500,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளில் சுமார் 375,000 தடுப்பூசிகள், இரண்டாவது டோஸை வழங்குவதற்காக தக்கவைக்கப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இரண்டாவது சுற்று தடுப்பூசி வழங்கல் ஜூன் 8 ஆம் திகதி தொடங்கும்.
மீதமுள்ள 125,000 டோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிற்கு காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
சீனாவிலிருந்து மேலும் மூன்று மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் விரைவில் நாட்டை வந்தடையும் என்று இராணுவத் தளபதி கூறினார்.




