கணவனை வேவு பார்த்த மனைவிக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Date:

அரபு நாட்டில் கணவனின் மொபைலை வேவு பார்த்த பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் அபராதம். கணவனின் மொபைலில் இருந்து புகைப்படங்களை வேறு சிலருக்கு பகிர்ந்ததாக அறியப்படுகிறது. கணவனுக்கு அவப்பெயர் உண்டாக்கியதாக குற்றம், நிரூபணம் ஆனது.

அரபி நாட்டில் ஒரு பெண்மணி, அவரது கணவரின் மொபைல் போனை வேவு பார்த்த குற்றத்திற்காக, தனி மனித தனியுரிமையில் தலையிட்டதற்காக, மனைவிக்கு இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தண்டனை வழங்கியுள்ளது.

அப்பெண்ணின் கணவரே நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். மனைவி தனது மரியாதை கெடும் வகையிலும், அவப்பெயர் உண்டாக்கும் வகையிலும் நடந்துக் கொண்டிருக்கிறார் என வழக்கு பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த ஆண்.

மேலும், மனைவி மொபைலை வேவு பார்த்த காரணத்தினால், வழக்கு தொடர்ந்து அலைய நேரிட்டு வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் இருந்து சம்பளம் வரவில்லை என்றும் கூறி இருந்தார். வழக்கு நடத்த ஆன செலவையும் மனைவியே கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

மனைவியின் இந்த செயலால், தனக்கு மனநல ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதே சமயத்தில், மனைவியின் வழக்கறிஞர், அந்த ஆண்… இந்த பெண்ணைக் கொடுமைப் படுத்தியதாகவும், திருமணமாகி ஒன்றாக வாழ்ந்து வந்த வீட்டில் இருந்து மனைவியை வெளியேற்றிவிட்டார். இதனால் அந்த பெண்ணும், மகளும் ஆதரவின்றி இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்ற விசாரணையில், அந்த பெண் கணவரின் மொபைலை வேவு பார்த்து, அவரது மொபைலில் இருந்த புகைப்படங்களை வேறு சிலருக்கு பகிர்ந்திருந்தது அறிய வந்தது. மேலும், கணவருக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் நடந்துக் கொண்டதும் ஊர்ஜிதமானது. இதனால், கணவருக்கு அந்த பெண்மணி இழப்பீடுக் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

மேலும், நீதிமன்ற அலைச்சலில் அந்த ஆண் சம்பளம் இழந்ததாக கூறியதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மற்றும் அந்த பெண்மணி 5,400 திர்ஹாம் அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

இதற்கு முன்பு ஒருமுறை, இளைஞர் ஒருவர், இளம்பெண் ஒருவரது உணர்ச்சி புண்படும் வகையில் நடந்துக் கொண்டதால், நீதிமன்றம், அவருக்கு ரூ.3.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜூலை , நினைவேந்தல் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி மாபெரும் கவனயீர்ப்பு

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து...

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்