25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஏன் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி நிறுவப்பட்டது?: இராணுவம் விளக்கம்!

சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பெண்கள் படையினரைக் கொண்ட பெண்கள் மோட்டார் சைக்கிள்களின் சிறப்பு குழுவை நிறுவியுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் மேற்பார்வையில் சிறப்பு மகளிர் மோட்டார் சைக்கிள் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் ஏழாவது மகளிர் படைப்பிரிவின் பெண் அதிகாரிகளால் இந்த பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

7 வது மகளிர் படைப்பிரிவின் மேஜர் ரஷ்மி கால்ஹெனவின் தலைமையில் பெண்கள் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

புதிய மோட்டார் சைக்கிள் அணியை நிறுவுவதன் நோக்கம் சுகாதார சட்டங்களை மீறுபவர்களைத் தேடுவதும், அவசரகால சாலைத் தடைகளை அமைப்பதன் மூலம் சுகாதாரச் சட்டங்களுக்கு இணங்காதவர்களைக் கைது செய்வதும் என்று பாதுகாப்புப் படைத் தலைமையகம் யாழ்ப்பாணம் தெரிவித்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் பிரிவு இந்த மாதம் 25 ஆம் திகதி நடவடிக்கைகளைத் தொடங்கியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment