பூநகரி ஜெயபுரத்தில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் கிராம சேவகர் மற்றும் அவருடைய மனைவி உயிரிழந்தனர்.
சாவக்சேரி பகுதிக்கு சென்று விட்டு பூநகரியில் உள்ள அவர்களின் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது
சம்பவத்தில் கிராம சேவகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (48) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மனைவி நகுலேஸ்வரன் சுமித்தா (44) கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



