26 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

மீட்கப்பட்ட கப்பல் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் தீப்பற்றிய MV-Express Pearl கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயமடைந்த இருவர் நேற்று மீட்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா?: பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பிரித்தானிய தமிழர் விடுதலை!

Pagetamil

Leave a Comment