Pagetamil
இலங்கை

காட்டிக் கொடுத்தது ட்ரோன்!

கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு ட்ரோன் கமரா நடவடிக்கைகளின் போது 4பேர் கைது செய்யப்பட்டனர். 27 பேர் எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டனர்.

மாளிகாவத்தை, கெசல்வத்தை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளை உள்ளடக்கிய ட்ரோன் நடவடிக்கை நேற்று நடத்தப்பட்டது.

கொழும்பு வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டை மீறி, வீட்டு வளாகங்களில் கூடிவருவதாக தகவல்கள் வந்தன.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறி கூடியிருந்தவர்களை கண்காணிக்க ட்ரோன் நடவடிக்கை காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை இணைந்து நடத்தியது.

இந்த நடவடிக்கையின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும், 27 பேர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மேற்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்களைக் கைது செய்வதற்காக சிறப்பு ட்ரோன் நடவடிக்கை இன்றும் தொடரும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!