25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

வாஸ், உதானவிற்கு தொற்று இல்லை: திட்டமிட்டபடி இன்று ஒருநாள் தொடர் ஆரம்பிக்கிறது!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று திட்டமிட்டபடி ஆரம்பிக்கவுள்ளது.

அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்தவாஸ், அணி வீரர்கள் இசுரு உதான, சிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், கொரோனா தொற்றிற்குள்ளானதாக முடிவு வெளியானது.

இதையடுத்து, இன்றைய போட்டி ஆரம்பிக்குமா என்ற சந்தேகம் நிலவியது.

இன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் சமிந்தவாஸ், இசுரு உதாணவிற்கு தொற்று இல்லையென்பது உறுதியானது.

இலங்கை அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஸிரான் பெர்னாண்டோவிற்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றிற்குள்ளாகி குணமடைந்திருந்தார். இறந்த கலங்கள் அவரது உடலில் இருந்து, கொரோனா சாதகமான பெறுபேறு ஏற்பட்டிருக்கலாமென இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

அதனடிப்படையில் போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

Leave a Comment