கொரோனா விழிப்புணர்வு விஷயத்தில் தமிழக அரசுக்கு உதவிய நடிகர் ஜெயம் ரவி!

Date:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும், ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமலும் மக்கள் அல்லல்ப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மத்தியில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் ஜெயம் ரவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கொரோனா குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காணொளிகள் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வீடியோ தற்போது ஜெயம் ரவியும் அதே போல் ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொதுநலன் கருத்தி ஜெயம் ரவி வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும், மேலும் தனிமனித சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அந்த வீடியோவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கிருமி நாசினியை பயன்படுத்தவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்றும் கொரோனாவை வெல்வோம் மக்களையும் காப்போம் என்றும் அதில் கூறியுள்ளார். மேலும் நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்