ஒரே நாளில் 3,57,630 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்: தினசரி பாதிப்பு 2,57,299!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,57,299 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,62,89,290

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,57,299

இதுவரை குணமடைந்தோர்: 2,30,70,365

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,57,630

கொரோனா உயிரிழப்புகள்: 2,95,525

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,194

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 29,23,400

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,33,72,819

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 32,64,84,155 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,66,285 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்