கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே பற்றியெரியும் கப்பல்! (PHOTOS)

Date:

கொழும்பு துறைமுகத்தில்ற்கு வெளியே நங்கூரமிட்டிருந்த MV X -Press Peral என்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடற்படை மற்றும் துறைமுக அதிகாரசபை தற்போது தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் கப்டன் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.

இந்த கப்பல் இந்தியாவின் குஜராத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை கொண்டு சென்று கொண்டிருந்தது. இதில் இரசாயனங்கள்  சேமிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

கப்பலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இரசாயனங்கள் கசிந்ததாகவும், மழை நீருடனான எதிர்விளைவு காரணமாக நேற்று மாலை முதல் கப்பலின் முன்புறத்தில் ஒரு புகை உருவாகி வருவதாகவும், தற்போது தீ விபத்துக்குப் பிறகு அதைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியதாவது, கடற்படை கப்பல், 02 டோரா கப்பல்கள் மற்றும் இரண்டு இலங்கை துறைமுக அதிகாரசபை இழுவை படகுகள் கப்பல் அருகே நிறுத்தப்பட்டிருந்தன.

சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த கப்பல், 2021 மே 15 அன்று இந்திய துறைமுகமான ஹசிராவிலிருந்து 25 தொன் நைட்ரிக் அமிலம் மற்றும்  அழகுசாதனப் பொருட்களின் 1486 கொள்கலன்களை ஏற்றிச் சென்றது. கொழும்பு கடற்கரையில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டபோது தீ விபத்து ஏற்பட்டது. . கப்பலின்  25 பணியாளர்கள்- பிலிப்பைன்ஸ், சீனா, இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டு பிரஜைகள் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடரக் கூடாது – ஐ.நா.வில் இலங்கை வலியுறுத்தல்

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடர அனுமதிக்கக் கூடாது...

ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் முன்னாள்...

கட்டாயம் பிரசுரித்து தரவும். நன்றி : அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கல்வியாளர்களையும் சாதனை மாணவர்களையும் கௌரவித்த ‘PEARLS – SEASON 07’

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வியாளர்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்