மருத்துவர்கள்,மருத்துவ ஊழியர்கள் குறித்து அரசுக்கு அக்கறை இல்லை;உயர் நீதிமன்றம் காட்டம்!

Date:

கொரோனாவால் மருத்துவர்களே உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மருத்துவர்களை பாதுகாப்பதில் மகாராஷ்டிர அரசு அக்கறை காட்டுவதில்லை என
மும்பை உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும், மருத்துவர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தகவல் வழங்கும்படி மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மாநில அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையின்போது, “ஒரு பக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு வழக்கறிஞரால் சரிபார்க்கப்படாத பிரமாண பத்திரங்கள் இனி ஏற்கப்படாது.

இது மிகவும் மோசமான நடவடிக்கை. மருத்துவர்களை பாதுகாக்க அரசு தீவிர அக்கறை காட்டவில்லை என தெரிகிறது. ஆனால், மருத்துவர்கள் முழு உழைப்பையும் வழங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அடுத்த வாரத்துக்குள் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி மாநில சுகாதாரத் துறை துணைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்