கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முழங்காவில் பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் ஒரு இலட்சம் கிலோகிராம் பூசணிக்காய் இருப்பில் இருப்பதாகவும், கொரோனா நிலமை காரணமாக தம்புள்ளை சந்தை பூட்டப்பட்டுள்ளமையால் அதனை சந்தைப்படுத்த முடியாத நிலமை காணப்படுவதுடன் அறுவடை செய்யப்பட்ட பூசணிக்காய்கள் பழுதடைவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் போது, பல ஏக்கர் நிலத்தில் பல சிரமத்தின் மத்தியில் சென்ற முறையும் விவசாயம் செய்து கொரோனாவால் பாதிப்படைந்தோம். இம்முறையும் பாரிய நட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளோம்.
இம்முறை நட்டம் ஏற்பட்டாலும் பரவாய் இல்லை ஒரு கிலோ பூசணிக்காயினை 20 அல்லது 25 ரூபாய்காவுது விற்க தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1