நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்: மாவட்ட ரீதியான விபரம்!

Date:

நாட்டில் நேற்று (18) களுத்துறை மாவட்டத்தில் இருந்து அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அந்த மாவட்டத்தில் 391 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

COVID-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்ட தகவல்படி, பாணந்துறை தெற்கிலிருந்து மட்டும் 255 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும், 2,518 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கம்பஹா மாவட்டத்தில் 350 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பு மாவட்டத்தில் இருந்து 333 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 179 பேரும், கேகாலை மாவட்டத்தில் இருந்து 170 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 144 பேரும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 113 பேரும், காலி மாவட்டத்தில் இருந்து108 பேரும், கண்டி மாவட்டத்தில் இருந்து 89 பேரும்,  நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 72 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 71 பேரும், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 65 பேரும், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 63 பேரும், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 56 பேரும், பதுளை மாவட்டத்தில் இருந்து 47 பேரும், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 45 பேரும் மற்றும் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த 40 பேரும், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 39 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 38 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 28 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 27 பேரும், பொலன்னருவை மாவட்டத்தில் இருந்து 25 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 24 பேரும் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்