கொவிட் 19 சிகிச்சை நிலையங்களிற்காக 3410 கட்டில்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
“உயிர் மூச்சைக் காக்கம் இளைஞர்கள்” எனும் தொனிப்பொருளில் குறித்த தேசிய வேலைத்திட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கழகங்களினால் முதல் கட்டமாக 40 கட்டில்கள் கையளிக்கப்பட்டது.
இதன் நிகழ்வு கிளிநொச்சி இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த கட்டில்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




