வணிக முகாமைத்துவ பீடத்தில் எவருக்கும் தொற்று இல்லை!

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த எவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று பி. சி. ஆர் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி வணிக முகாமைத்துவ பீடத்தின் சமகால சர்வதேச ஆய்வியல் மாநாடு இடம்பெற்றிருந்த நிலையில், அந்தப் பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். அதனையடுத்து பீடத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு, பீடத்தைச் சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 74 பேருக்கும் இம்மாதம் 6 ஆம் திகதி பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நல்லூர் பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பெறப்பட்ட மாதிரிகள் யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பரிசோதனைகளின் முடிவில் 74 பேரில் எவருக்கும் தொற்று இல்லை என்று கடந்த 07 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், தொற்றுக்குள்ளான விரிவுரையாளருடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று பொதுச் சுகாதார பரிசோதகரால் அடையாளப்படுத்தப்பட்ட 19 பேர் மீண்டும் கடந்த 8 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் கடந்த 13 ஆம் திகதி மீளவும் பி. சி. ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளின் படி அவர்களிலும் எவருக்கும் தொற்று இல்லை என்று நேற்று மாலை வெளியான முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்