திரிபடையும் கொரோனா: முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை; கொழும்பில் யுத்த நிறைவு நிகழ்விற்கு ஏற்பாடு!

Date:

கொழும்பில் யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக அமைக்கப்பட்ட தூபியில் நிகழ்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யுத்த வெற்றியை நினைவுகூர்வதுடன், கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த பகுதியில் கலந்த சில வருடங்களான மே 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளிற்கு கொரோனாவை காரணம் காண்பித்து, பொலிசார் ஓடியோடி வடக்கில் தடையுத்தரவுகளை பெற்று வரும் நிலையில், கொழும்பில் யுத்த வெற்றி தினத்தில் இந்த நிகழ்வு இடம்பெற ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனேகமாக நாளை கொண்டாட்டம் இடம்பெறலாமென தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் எதிர்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் நினைவிடத்தில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இராணுவத்தினர் பலர் அங்கு இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

3 பெரிய கொட்டகைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறவிருந்த நிலையில், முல்லைத்தீவின் 3 பொலிஸ் பிரிவுகள் இன்றிரவு முதல் முடக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்