கிளிநொச்சியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்படுமா?

Date:

தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலதிக தீர்மானம் இன்று (17) எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

நேற்றைய PCR முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 7ம் யூனிற் பகுதியில் 07 பேரும் 5ம் யூனிற் பகுதியில் 01 வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் PCR பரிசோதனைகளின் பின்னரே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுத சுகாதார தரப்பினர் மற்றும் இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட கொவிட் செயலணி தெரிவித்துள்ளது.

மேலதிக விடயங்கள் தொடர்பில் இன்று ஆராய்ந்து தீர்மானம் எட்டப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைப்பு

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு நிந்தவூர் அமீர் மேர்சா பொது...

“அனுரவே” எம்மை சொந்த நிலங்களில் வாழவிடு – மயிலிட்டி மக்களின் 18 ஆவது வாரக் கண்ணீர்ப் போராட்டம்!

வலிகாமம் வடக்கில் பல தசாப்தங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்