சீனாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சூறாவளி தாக்குதலால் 12 பேர் உயிரிழப்பு ; 400க்கும் அதிகமானோர் படுகாயம்!

Date:

சீனாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். சீனாவின் கிழக்கே ஜியாங்சு மாகாணத்தில் சுஜோ நகரில் ஷெங்ஜே பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் சூறாவளி வீசியது. இதன் பாதிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.

149 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உகான் நகரில் 2 மாவட்டங்களின் வழியே மற்றொரு சூறாவளியானது கடந்து சென்றது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு 8 பேர் உயிரிழந்தனர். 280 பேர் காயமடைந்தனர்.

சூறாவளியால் உகான் நகரில் 27 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுதவிர 130 வீடுகள் சேதமடைந்தன. கட்டிட பணி நடந்து வந்த இடத்தில் உள்ள கூடாரங்கள், 2 கிரேன்களும் சேதமடைந்தன. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. இந்த சூறாவளியானது மணிக்கு 202 முதல் 220 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசியது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்