29.7 C
Jaffna
April 19, 2024
இலங்கை

கிளிநொச்சியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்படுமா?

தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலதிக தீர்மானம் இன்று (17) எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

நேற்றைய PCR முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 7ம் யூனிற் பகுதியில் 07 பேரும் 5ம் யூனிற் பகுதியில் 01 வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் PCR பரிசோதனைகளின் பின்னரே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுத சுகாதார தரப்பினர் மற்றும் இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட கொவிட் செயலணி தெரிவித்துள்ளது.

மேலதிக விடயங்கள் தொடர்பில் இன்று ஆராய்ந்து தீர்மானம் எட்டப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

இராணுவம் தேர் இழுத்த கோயில் சர்ச்சை: அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தின் விளக்கம்!

Pagetamil

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

Leave a Comment