கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; ‘டவ் தே’ புயல்

Date:

‘டவ் தே’ புயல் காரணமாக கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு அருகே உருவான மிகத்தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டவ்தே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

கடல் கொந்தளிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மணிமலை ஆறு, அச்சன்கோவில் ஆறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், வரும் 17ம் தேதி வரை கேரளா முழுவதும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவனந்தபுரம், எர்ணாகுளம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக பேரிடர் நிவாரண படையினர், கடற்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்