வடக்கில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வடக்கில் இன்று 642 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 11 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மானிப்பாய் வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.
கிளிநொச்சி வைத்தியசாலை 4 பேர், பளை வைத்தியசாலை ஒருவர். கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், மன்னார் வைத்தியசாலையில் ஒருவர் (சுகாதார உத்தியோகத்தர்) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா வைத்தியசாலை 1, பூவசரசங்குளம் வைத்தியசாலை 1, வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




