வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்: முல்லைத்தீவு, மன்னாரிலும் எகிறியது!

Date:

வடக்கில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வடக்கில் இன்று 642 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 9 பேரும்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 11 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர்,  சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மானிப்பாய் வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்ட 20 பேரும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள்.

கிளிநொச்சி வைத்தியசாலை 4 பேர், பளை வைத்தியசாலை ஒருவர். கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், மன்னார் வைத்தியசாலையில் ஒருவர் (சுகாதார உத்தியோகத்தர்) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா வைத்தியசாலை 1, பூவசரசங்குளம் வைத்தியசாலை 1, வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்