Pagetamil
உலகம்

இரண்டாம் அலை கொரோனா இந்த ஆண்டில் கொடூரமாக இருக்கும் ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இந்த ஆண்டில் கொரோனா நெருக்கடி மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.இரண்டாவது ஆண்டாக கொரோனா வைரஸுடன் உலகமே போராடி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை தற்போது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் கொரோனா மிக அபாயகரமாக இருக்குமென உலக சுகாதார அமைப்பை சேர்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், “கொரோனா கொள்ளை நோயின் முதல் ஆண்டைக் காட்டிலும் இரண்டாம் ஆண்டு மிகக் கொடியதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 10 வாரங்கள் இருக்கும் நிலையில் ஜப்பானில் கொரோனா நெருக்கடி மிக மோசமாகியுள்ளது. ஜப்பானில் கூடுதலாக மூன்று பிராந்தியங்களில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை இப்படியிருக்க ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யும்படி கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. ஏற்கெனவே டோக்யோவில் எமர்ஜென்சி அமலில் இருந்த நிலையில் தற்போது ஹிரோஷிமா, ஒகாயமா, ஹொக்கைடோ ஆகிய பகுதிகளிலும் எமர்ஜென்சி அமலுக்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

கழிப்பறையில் வாழும் சீன யுவதி

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!