வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்; உடலில் கடித்த காயங்கள் – ப்ரியங்கா குடும்பத்தார்!

Date:

வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் நடிகர் உன்னி தேவின் மனைவி ப்ரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ப்ரியங்காவின் உடலில் கடித்த காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் ராஜன் பி தேவின் மகன் உன்னி. தந்தை வழியில் உன்னி தேவும் நடிகராகிவிட்டார். மலையாள படங்களில் நடித்து வரும் உன்னிக்கும், ப்ரிங்யங்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்த புதிதில் இருவரும் சந்தோஷமாக இருந்துள்ளனர். ஆனால் ப்ரியங்காவின் நகைகளை உன்னி விற்கத் துவங்கிய போது தான் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

ப்ரியங்காவின் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கியிருக்கிறார் உன்னி. ஒரு கட்டத்தில் மனைவியை அடித்து வீட்டை விட்டு விரட்டிவிட்டார். தன் அம்மா வீட்டிற்கு வந்த ப்ரியங்கா, உன்னி தேவ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்த மறுநாளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ப்ரியங்கா. அவருக்கு வயது 26. ப்ரியங்கா தங்கள் வீட்டிற்கு வந்தபோது அவர் உடலில் காயங்கள் இருந்ததாக அவரின் சகோதரர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ப்ரியங்காவின் உறவினர் ஒருவர் மலையாள ஊடகத்திடம் கூறியதாவது,

வரதட்சணை தொடர்பாக உன்னி, ப்ரியங்காவை அடித்து துன்புறுத்தி வந்தார். முதலில் இதை ப்ரியங்கா எங்களிடம் கூறவில்லை. ஆனால் உன்னியின் கொடுமை தாங்க முடியாத அளவுக்கு சென்ற பிறகே அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உன்னி தன் தேவைகளுக்காக ப்ரியங்காவின் நகைகளை விற்கத் துவங்கினார். உன்னி கேட்கும்போது எல்லாம் ப்ரியங்காவின் அம்மா பணம் கொடுத்தார்.

ப்ரியங்காவின் நகைகள் அனைத்தையும் விற்ற பிறகு அவரை அடித்து உதைத்து வீட்டை விட்டு விரட்டிவிட்டார் உன்னி. ஈவு இரக்கமே இல்லாமல் அடித்திருக்கிறார். ப்ரியங்காவை கடிக்கவும் செய்திருக்கிறார். உன்னி தன்னை தாக்கியபோது அதை ப்ரியங்கா வீடியோ எடுத்துவிட்டார்.

அம்மா வீட்டிற்கு வந்ததும் உன்னி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உன்னியை சும்மாவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால் இதற்கிடையே ஒரு போன் கால் வந்தது. அதன் பிறகே ப்ரியங்கா தற்கொலை செய்து கொண்டார். உன்னியை தண்டிக்க வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்