உயிருக்கு போராடும் யானையை காப்பாற்ற பிரித் ஓதும் பிக்குகள்!

Date:

வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் இருந்த யானையினை காக்கும் நோக்கோடு வவுனியா பௌத்த துறவிகளால் பிரித்தோதல் இடம்பெற்றுள்ளது.

வவுனியா – புளியங்குளம் – புதூர் காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் குறித்த பகுதியிலுள்ள காட்டில் உயிருக்கு போராடிய நிலையில் இருக்கின்றது.

12 வயது மதிக்கத்தக்க குறித்த யானைக்கு இராணுவத்தினர், வனவிலங்கு துறையினர், கிராம மக்களின் உதவியுடன் வனவிலங்கு துறையின் வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரன் சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில் காயமடைந்த குறித்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில் அதனை காப்பற்றும் நோக்கோடு இன்றைய தினம் பௌத்த துறவிகளினால் பிரித்தோதல் வழிபாடும் குறித்த இடத்தில் இடம்பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண் மரணத்தின் காரணம் என்ன?

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்