இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,26,098 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,43,72,907 ஆக அதிகரித்துள்ளது.தற்போது கொரோனா வில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36,73,802 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவிலிருந்து 2,04,32,898 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கொரோனாவிலிருந்து 3,53,299 பேர் குணமடைந்தனர்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3,890 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,66,207 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 18,04,57,579 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 31,30,17,193 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 16,93,093 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன . இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்