கொவிட் தொற்றாளர் ஒருவர் கிளிநொச்சியில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கொவிட் தடுப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்ற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் வவுனியா இறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1