என்னை அவமானப்படுத்தினார்கள், ஆனால் இப்போ ப்ரோபோசல்களை எண்ண முடியவில்லை; பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்!

Date:

பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் தான் பள்ளியில் படிக்கும்போது குண்டாகி இருந்ததற்காக அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.

பள்ளி படிக்கும் காலத்தில் பட்ட அவமானங்களையும், தற்போது அதை தாண்டி ஜெயித்து இருப்பதையும் பற்றி சாக்ஷி அகர்வால் பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சாக்ஷி அகர்வால். அந்த சீசனில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடப்பதற்கு சாக்ஷி அகர்வால் தான் முக்கிய காரணம் என்றும். சொல்லலாம். கவின் மற்றும் சாக்ஷி இடையேயான பிரச்சனை பெரிய அளவில் நடந்தது.

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் எப்போதும் படுக்கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பள்ளியில் சில பெண்கள் என்னை பார்த்து ஒரு விஷயம் சொல்வார்கள். நான் குண்டாக அசிங்கமாக இருப்பதாகவும், என்னை எந்த ஒரு பையனுக்கும் பிடிக்காது, பெண்கள் என்னிடன் நட்பில் இருக்க விரும்பமாட்டார்கள் என சொன்னார்கள். ஆனால் தற்போது எனக்கு வரும் ப்ரோபோசல்களை அவர்களால் என்ன முடியவில்லை.

அகத்தின் அழகு தான் முக்கியம். யாரையும் எந்த காரணத்திற்காகவும் இப்படி தவறாக பேசாதீர்கள். பள்ளி, கல்லூரி, பணியிடம் எதுவாக இருந்தாலும் யாரும் சிறுமையாக உணரக்கூடாது. இந்த கிரகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அழகு தான்.

இவ்வாறு சாக்ஷி அகர்வால் கூறி உள்ளார்.

சாக்ஷி அகர்வால் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களில் ஆடை மிகவும் சிறியதாக இருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்துள்ள சாக்ஷி அகர்வால் ‘ஆமாம், உங்கள் மூளையின் அளவை பார்த்து தான் என் டிசைனர் inspire ஆகி இருப்பார்’ என கூறி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

உறுப்பு தானம் மூலம் பிறர் வாழ்வை வளப்படுத்தி மறையாத மாமனிதர்கள்!

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் உலக உடல் உறுப்பு...

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: ஊழியர்களின் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில்...

28 வயது காதலனுக்காக குழந்தையை வீதியில் விட்டுச்சென்ற 38 வயது தாய்

வத்தேகம பொலிஸ் பிரிவின் யதிரவன பகுதியில் உள்ள ஒரு குறுக்குச் சாலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்