இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த தமிழக மீனவர் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்து வந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சிலர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.
அவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.
தற்போதைய கொரோனா அச்சம் காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யாமல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையையே கடற்படையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன்படி, வியாழக்கிழமை ஊடுருவிய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்யாமல், இலங்கை கடற்பரப்பை விட்டு வெளியேற்றியது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
1
+1
+1
+1
1