கொரோனா பராமரிப்பு பெட்டிகள் என அழைக்கப்படும் 298 ரயில் பெட்டிகள் நாட்டின் ஏழு மாநிலங்களில் உள்ள 17 நிலையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
“தற்போது, 4,700’க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட படுக்கை திறன் கொண்ட 298 ரயில் பெட்டிகள் பல்வேறு மாநிலங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.” என்று ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இரண்டு ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளை ரயில்வே வழங்கியுள்ளது.
மொத்தத்தில், ரயில்வே மகாராஷ்டிராவில் 60 பெட்டிகளையும், மத்திய பிரதேசத்தில் 42 பெட்டிகளையும், டெல்லியில் 75 பெட்டிகளையும், உத்தரபிரதேசத்தில் 50 பெட்டிகளையும், அசாமில் பல பெட்டிகளையும் நிறுத்தியுள்ளது.
“கவனம் செலுத்தும் கண்காணிப்பு மற்றும் விரிவான பணி ஓட்ட நெறிமுறைகள் மூலம், மாநிலங்களின் தேவைக்கேற்ப தனிமைப் பெட்டிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நகர்த்த ரயில்வேவால் முடிந்தது” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 4,03,738 புதிய கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில், இந்தியா நான்காவது நாளாக நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட தினசரி கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தொடர்ந்து பதிவு செய்துள்ளது.
இதன் மூலம், நோய்த்தொற்றின் ஒட்டுமொத்த தேசிய எண்ணிக்கை 2,22,96,414 ஆக உயர்ந்தது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்தது.




