யாழ் நகரில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்: நஞ்சருந்தி உயிரிழந்த கணவன்; தகவலறிந்து அதே நஞ்சருந்தி உயிர்நீத்த மனைவி!

Date:

கணவர் இரசாயன திரவம் அருந்தி உயிரிழந்த தகவலறிந்ததும், மனைவியும் அதே இரசாயகத்தை பருகி உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ் நகரம், கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைத்தொழிலக பட்டறையொன்றில் நேற்று (8) இடம்பெற்றது.

திருநெல்வேலியை சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (34), மனைவி ரஜிதா (33) இருவருமே உயிரிழந்தனர்.

பகீரதன் நேற்று மாலை விபரீத முடிவெடுத்து நகைத் தொழிலுக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை பருகியுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், உயிரிழந்தார்.

கணவர் உயிரிழந்த தகவலையறிந்ததும் மனைவியும் அதே இரசாயனத்தை உட்கொண்டு உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களின் முன்னர் அவர்கள் பிரசவித்த குழந்தையொன்று, சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளது. அந்த மனவிரக்தியில் அவர்கள் இருந்தனர் என தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்