பருத்தித்துறையில் சிக்கிய ‘ரோசா’: 91 கிலோ கஞ்சாவும் மீட்பு!

Date:

வடமராட்சி கடற்பரப்பில் தொடரும் சட்டவிரோத கடல் நடவடிக்கை மூலம் இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டிற்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்தி வரும் சம்பவங்கள் கடந்த நாட்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

யாழ்.ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பரப்பில் இன்று (04) அதிகாலை 01.00 மணியளவில் 91 கிலோ கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ‘ரோசா’ ரக மினிபஸ் மற்றும் சாரதியும் கைது செய்யப்பட்ட நிலையில் படகில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.

அத்துடன் வடக்கு கடலில் இவ்வாறான சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால் இந்தியாவில் உள்ளவர்கள் மூலம் யாழ். குடாநாட்டிற்குள்ளும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்