துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 18,19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை இந்த விவாதம் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த போதும், துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்ற வியாக்கியானம் இதுவரை சபாநாயகருக்கு அறிவிக்கப்படாததை தொடர்ந்து, இன்று முற்பகல் கட்சி தலைவர்கள் கூடி இந்த விவகாரத்தை ஆராய்ந்தனர்.
இதையடுத்து, 18, 19ஆம் திகதிக்கு விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



