இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளைக் கட்டுப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு விரைவான ஆதரவைத் திரட்டியதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நடந்த உச்சிமாநாட்டிலிருந்து இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய கூட்டாண்மை புதுப்பிக்கப்பட்ட வேகத்தை அடைந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மே 8’ஆம் திகதிமெய்நிகர் வடிவத்தில் நடைபெறவிருக்கும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டம் இரு தரப்புக்கும் இடையே முக்கியமான வாய்ப்பாகும் என்று தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
“இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டம் ஐரோப்பிய ஒன்றிய முதல் சந்திப்பாக இருக்கும். மேலும் இது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான இரு தரப்பினரின் பகிரப்பட்ட லட்சியத்தையும் பிரதிபலிக்கிறது.” என்று இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




