இந்த மாதத்தில் பொதுமக்களின் நடத்தையே ஒட்சிசன் தேவையை தீர்மானிக்கும்!

Date:

கொரோனா வைரஸின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அடுத்த நான்கு வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானதாக இருக்கும் என்று ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்ள்ளே தெரிவித்துள்ளார்.

மே மாதம் முழுவதும் மக்கள் சுகாதார ஆலோசனையை கடுமையான முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க சுகாதார பிரிவுகளுக்கு மக்கள் ஆதரவு தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

போதுமான தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மற்றும் போதுமான ஒட்சிசன் உள்ளதா என்பது குறித்து பலர் கவலை கொண்டுள்ள நிலையில், ஒட்சிசன் கிடைப்பது இந்த மாதத்தில் மக்களின் நடத்தைiயப் பொறுத்தது என்றார்.

பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கக்கூடும் என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே அடுத்த நான்கு வாரங்களில் பொறுப்புடன் செயல்படுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு- யாழ் இரயிலில் அதிகவிலையில் குடிநீர் போத்தல் விற்பனை

குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் போத்தல் குடிநீர் விற்கப்படுவதைக்...

போலிப்படத்தை பரப்பாதீர்கள்

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), தங்களைக் குறிவைத்து சமூக ஊடகங்கள்...

நவாலி தேவாலய படுகொலை நினைவு

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்