தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றே கூறுவது இல்லை. இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர்.

வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்திகொண்டிருந்த அஜித் தன்னுடைய மனைவி, மகள், மகன் அவர்களுடன் மட்டும் ஜாலியாக இருப்பார்.
இப்போது சைக்கிளிங், Bike Ride, பிஸ்டல் ஷூட்டிங் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிவரும் அஜித் அவர் நடித்து வரும் வலிமை பற்றின அப்டேட்கள் மட்டும் வரமாட்டேங்குது என்று கவலையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். வலிமை படத்தின் அப்டேட் வராததால் ரசிகர்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அது வேறு ஒன்றுமில்லை தனது காதல் மனைவி ஷாலினியுடன் அவர் எடுத்த புகைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் “எந்த கண்ணே பட்டுடும் போல.. திருஷ்டி சுத்தி போடுங்க” என்று கண்ணு வைக்கிறார்கள்.





