யாழ்- கொழும்பு புகையிரதத்தில் படுக்கை ஆசன வசதி!

Date:

யாழ் -கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் படுக்கை ஆசன சேவை ஆரம்பம் என யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இம்மாதம் 7ஆம் திகதியிலிருந்து இரவு நேர தபால் சேவை புகையிரதத்தில் படுக்கை ஆசன சேவை யாழ்ப்பாணம் -கொழும்பு இரவு நேர தபால் புகையிரத சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ் புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இரவு நேர தபால் புகையிர சேவை யில் குறித்த படுக்கை ஆசன வசதி கொண்ட மேலதிக பெட்டி இணைக்கப்பட்டு சேவை இடம்பெறவுள்ளதாகவும் சேவையினை பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண புகையிரதத்தில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

தற்போது புகையிரத சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வினவிய போது, அதில் எவ்வித உண்மையும் இல்லை. கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து மீண்டும் 1 .15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு 1.37மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்படும் நகர் சேர் கடுகதி புகையிரத சேவை மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் வழமைபோல் தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தளாயில் நீரில் மூழ்கி மாணவன் பலி

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த...

தர்மபுரம் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு (A35) வீதியில்,...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்