பக்தர்கள் திரண்டதால் மன்னாரில் இரண்டு தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம் பெற்ற இரண்டு தேவாலயங்கள் இன்றைய தினம் சனிக்கிழமை (1) காலை தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதியில் உள்ள இரண்டு தேவாலயங்களிலும் இன்றைய தினம் திருவிழா திருப்பலி இடம்பெற்றது.

இந்த நிலையில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்றுகூட்டி திருவிழா மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த இரண்டு ஆலயங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றில் இருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த இரு ஆலயமும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்