25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம்

ஈரான் கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க கடற்படை..

பாரசீக வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் கப்பலுக்கு மிக நெருக்கமாக ஈரானின் துணை ராணுவ படையினரின் கப்பல் வந்ததால் அமெரிக்க கடற்படை துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாரசீக வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் அமெரிக்க போர் கப்பல் ஈடுபட்டு இருந்தது. அப்போது, மேற்காசிய நாடான ஈரானின் துணை ராணுவ புரட்சி படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அமெரிக்க கப்பலுக்கு 200 அடி துாரத்தில் நெருங்கி வந்தது.

இதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், இது குறித்து அமெரிக்க கப்பல் படையினர், ரேடியோ வாயிலாகவும், ஒலிபெருக்கி உதவியுடனும் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் பொருட்படுத்தாமல் ஈரான் நாட்டு கப்பல் நெருங்கி வந்ததை அடுத்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து ஈரான் கப்பல் விலகி சென்றது. இது தொடர்பான, வீடியோ காட்சிகளை அமெரிக்க கடற்படை வெளியிட்டது. ‘இது போல பாதுகாப்பற்ற முறையில் ஈரான் படையினர் கப்பலை இயக்குவது சமீபத்தில் இது இரண்டாவது முறை’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment