29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

சகோதரியை கொன்று நகை திருடிய அண்ணன் கைது!

புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை பொன்நகரை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி சிவகாமி. மின்வாரிய ஊழியர். இவரது மகள் லோகப்பிரியா (20). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (27) சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த லோகப் பிரியாவை, மர்மநபர்கள் படுகொலை செய்து, பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

மாலையில் சிவகாமி வீட்டிற்கு திரும்பியபோது, லோகப்பரியா கொலை செய்யப்பட்டிருந்தார். தகவல் அறிந்த புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, லோகபிரியாவின், பெரியம்மா மகன் சுரேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகை மற்றும் பணத்திற்காக அவர் லோகப் பிரியாவை கைதுசெய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சுரேஷை கைதுசெய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment