பிங்கிரிய-விலாட்டவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை மூடக் கோரி கிராம மக்கள் வீதிக்கு இறங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக இந்த தொழிற்சாலையில் இருந்து ஏராளமான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ள போதிலும், தொழிற்சாலை மூடப்படாமல் இன்னும் செயல்பட்டு வருவதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலைக்கு அருகில் வசிப்பதால் தமது பிள்ளைகள் பாடசாலைகளில் அனுமதிக்கப்படவதில்லையென்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தொழிற்சாலை தொடர்ந்து இயங்கினால் தங்கள் கிராமம் பெரும் ஆபத்தில் இருக்கும் என்றும், தொழிற்சாலையை இயங்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கிராம மக்கள் கூறினர்.
கடந்த சில நாட்களில், அந்த தொழிற்சாலையில் இருந்து 142 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பின்னர் தொழிற்சாலையை மூடுவதை பற்றி இன்று மாலை முடிவெடுப்பதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, போராட்டம் முடிந்தது.
பதற்றமான நிலைமையைடத்து பிங்கிரய, தும்மலசூரிய, ஹெட்டிபொல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.



