இந்தோனேசியா :இந்தோனேசியாவுக்கு சொந்த நீர்மூழ்கி கப்பல் பாலி தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கப்பலை காணவில்லை என கடந்த 21ஆம் தேதி முதல் தேடப்பட்டு வந்தது.
தேடுதல் வேட்டைக்காக வீரர்கள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் நீர் மூழ்கி கப்பல் கடலில் 2 ஆயிரத்து 788 அடி ஆழத்தில் கப்பல் மூழ்கி உள்ளதாக கண்டறியப்பட்டது.மேலும் கப்பலில் இருந்த 53 மாமலுமிகள் நிலை என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நீர் மூழ்கி கப்பலின் திறனை காட்டிலும் மிக அதிகமான ஆழத்தில் கப்பல் சிக்கிக் கொண்டது.
கப்பலில் உள்ள மாலுமிகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அவர்கள் உயரிழந்திருக்கலாம் என்று கருதப்படுவதால் உடல்கள் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.




