காணாமல் போன இந்தோனேசிய கடற்படையின் நீர்மூழ்கி போர்க்கப்பல்;உதவிக்கு களமிறங்கியது இந்திய கடற்படை..!

Date:

இந்தோனேசிய கடற்படையின் நீர்மூழ்கி போர்க்கப்பல் காணாமல் போயுள்ள நிலையில், அதைத் தேடும் பணியில் இந்தோனேசியாவிற்கு உதவ இந்திய கடற்படை இன்று ஆழமான நீரில் மூழ்கும் கப்பல்களை மீட்கும் மீட்புக் கப்பலை அனுப்பியது.

இந்தோனேசிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலான கே.ஆர்.ஐ.நங்கலா-402 நேற்று பாலி கடற்பகுதியில் இராணுவப் பயிற்சியின் போது காணாமல் போனது.

டீசல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிப்பதற்கான இந்தோனேசிய கடற்படைக்கு ஆதரவாக விசாகப்பட்டினத்தில் இருந்து ஆழமான நீரில் மூழ்கும் கப்பல்களை மீட்கும் மீட்புக் கப்பல் (டி.எஸ்.ஆர்.வி) புறப்பட்டதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் எஸ்கேப் மற்றும் மீட்பு தொடர்பு அலுவலகம் (இஸ்மெர்லோ) மூலம் பெறப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்திய கடற்படை டி.எஸ்.ஆர்.வி. உதவிக்குச் சென்றுள்ளது.

பாலிக்கு வடக்கே 25 மைல் தொலைவில் நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டபோது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

“கே.ஆர்.ஐ. நங்கலா என்ற நீர்மூழ்கிக் கப்பலுக்கான தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளில் இந்தோனேசிய கடற்படைக்கு உதவ இந்திய கடற்படை இன்று தனது டி.எஸ்.ஆர்.வி அனுப்பியது” என்று இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தளபதி விவேக் மாத்வால் தெரிவித்தார்.

உலக அளவில் டி.எஸ்.ஆர்.வி மூலம் நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி மீட்பதற்கான திறன் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றார். இந்திய கடற்படையின் டி.எஸ்.ஆர்.வி அமைப்பு 1000 மீட்டர் ஆழத்தில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மை கட்டமைப்பின் கீழ், இரு கடற்படைகளும் செயல்பாட்டு ஒத்துழைப்பின் வலுவான நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்