29.5 C
Jaffna
March 28, 2024
இந்தியா

தாடி வைத்திருந்தால் இனி திருமணமில்லை!

மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணத்தை புறக்கணிப்பது என்று மீனவ கிராம பஞ்சாயத்தார் முடிவு செய்துள்ளனர்.

காலம் காலமாக சில கிராமங்களில் வித்தியாசமான நம்பிக்கைகள் கடைப்பிடிப்படுகின்றன. இதற்காகவே, கிராமத்தில் கூட்டம் போட்டு ஊர் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த நம்பிக்கைகள் பலருக்கு விசித்திரமாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களிற்கு அது சரித்திரமாகவே இருக்கும்.

அந்தவகையில் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கத்தை கடைப்பிடிக்க மீனவ பஞ்சாயத்தார் கூட்டம்போட்டு வினோதமான முடிவு எடுத்துள்ளனர்.

காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான திருமண விழாக்களில் மணமகன்கள் முடிவெட்டாமல், தாடியை முழுமையாக சவரம் செய்யாமல் கலந்துகொள்கின்றனர்.

இது நமது பண்பாடு அல்ல, நமது பாரம்பரிய பண்பாட்டின்படி, திருமணத்தின்போது, தாடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே, பழைய பண்பாட்டு, பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில், இனிவரும் காலங்களில், திருமணத்தின்போது மணமகன் தாடி வைத்திருந்தால், அந்த திருமண விழாவை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment